
“தேவன் உன்னை பார்த்துக்கிட்டு இருக்கிறார்! கவனமா இரு!” இதை கேட்டிருக்கீர்களா? அதைக் கேட்கும்போதே மனதில் ஒரு திகில் ஏற்படும்.
ஆனால் நீங்கள் தேவனை அறிந்தவரானவராக இருந்தால், தேவன் உங்களைக் காண்கிறார் என்று அறிவதைப் போன்ற ஆறுதல் எதுவும் இல்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்.
இப்படி நினைத்துப் பார்த்தால் இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது: பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் படைத்த கடவுள் (வெப்பமான சூரியன், மின்னும் நட்சத்திரங்கள், முடிவற்ற வானம், பஞ்சு போன்ற மேகங்கள், அழகான பட்டாம்பூச்சிகள் போன்றவை) உங்கள் ஒவ்வொரு சிறிய விஷயத்திலும் ( உடைந்த பேனா, மோசமான முடி நாள் போன்றவை) மற்றும் உங்கள் வாழ்க்கையின் பெரிய விஷயங்களிலும் (தேர்வுகள், நோய், நிதி போன்றவை) மிகவும் அக்கறை காட்டுகிறார்.
இதை ஆழமாகப் புரிந்தால் இயல்பாகவே இப்படி தேவனிடம் சொல்வோம் – “ஆண்டவரே, என்னை எப்பொழுதும் பார்த்துக்கொள்ளும். உமது வழி என் வழி ஆகட்டும்!”
“என் வழி” என்ற 4 பகுதி கொண்ட பாடத் திட்டத்தை உங்களுக்கு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தச் செய்தியை சிறுவர்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் அவர்களுக்கு எடுத்துச் செல்ல இந்த பாடத் திட்டம் உதவும் என்று நம்புகிறோம்.
குறிப்பு: செய்தியின் ஆழத்தை உங்கள் பார்வையாளர்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்க உங்கள் அனுபவத்தைப் பயன்படுத்தவும்.
Quick Links
J4K Lesson Plan > Outline
விரிவான பாடங்களுக்கு பட்டன்களை கிளிக் செய்யவும்.
01
என் வழி!
வேத பகுதி: 1 இராஜாக்கள் 3:3-15
வேதாகம நிகழ்வு: சாலொமோன் தனது வழிகளை தேவனிடம் சமர்பித்தார்
செய்தி (8 வயதுக்கு மேல்):
நீங்கள் புதிதாக ஏதாவது தொடங்குகிறீர்களா? இதைப் பற்றி இயேசுவிடம் பேச மறந்துவிடாதீர்கள், உங்களுக்கு உதவுமாறு அவரிடம் கேளுங்கள். அப்படித்தான் உங்கள் வழியை தேவனிடம் சமர்ப்பிக்கிறீர்கள்.
செய்தி (8 & கீழே):
ஒவ்வொரு முறையும் நீங்கள் புதிதாக ஏதாவது செய்யும்போது, இயேசுவிடம் “தயவுசெய்து எனக்கு உதவுங்கள்” என்று சொல்லுங்கள்.
மனப்பாட வசனம்:
நீ எதைச் செய்தாலும் ஆண்டவரை மனத்தில் வைத்துச் செய்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செம்மையாக்குவார். [நீதிமொழிகள் 3:6]
02
சாத்தியமற்ற வழி!
வேத பகுதி: யாத்திராகமம் 14:5-31
வேதாகம நிகழ்வு: மோசே சாத்தியமற்ற ஒரு வழியைக் கண்டுபிடித்தார்.
செய்தி (8 வயதுக்கு மேல்):
உங்கள் வாழ்க்கையைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்களா, எந்த வழியில் செல்வது என்று தெரியவில்லையா? வழி இல்லாத இடங்களில் தேவனால் மட்டுமே ஒரு வழியை உண்டாக்க முடியும் என்பதை மறந்துவிடாதீர்கள். அவரை நம்பினால் வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள்.
செய்தி (8 & கீழே):
நீங்கள் கடினமான காரியங்களைச் செய்யும்போது, ”தயவுசெய்து எனக்கு உதவுங்கள்” என்று இயேசுவிடம் சொல்லுங்கள்.
மனப்பாட வசனம்:
நான் வனாந்தரத்திலே வழியையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன். [ஏசாயா 43:19b]
03
தேவனின் வழி!
வேத பகுதி: யாத்திராகமம் 2:11-4:17
வேதாகம நிகழ்வு: மோசேயின் திட்டங்கள் Vs தேவனின் திட்டம்
செய்தி (8 வயதுக்கு மேல்):
பெரிய கனவுகளோடு வாழ்கிறீர்களா? தேவன் உங்களுக்காக வைத்திருக்கும் கனவு உங்களுடையதை விட பெரியது என்பதை மறந்துவிடாதீர்கள். உங்களுடைய திட்டங்களை விட அவருடைய திட்டங்களை நீங்கள் நம்பினால், நீங்கள் நம்பமுடியாத அளவிற்கு அவர் உங்களை உயர்த்துவார்.
செய்தி (8 & கீழே):
நீங்கள் வாழ்க்கையில் உயரவேண்டும் என்று இயேசு விரும்புகிறார். நீங்கள் அவரை அனுமதித்தால், அவர் உங்களை மிகவும் பெரியவராக்குவார்.
மனப்பாட வசனம்:
பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது. [ஏசாயா 55:9]
04
சிறந்த வழி!
வேத பகுதி: ஆதியாகமம் 11:27 – 12:9
வேதாகம நிகழ்வு: ஆபிரகாம் சிறந்த வழியைக் கண்டுபிடித்தார்
செய்தி (8 வயதுக்கு மேல்):
தேவன் காட்டும் வழியில் நடப்பதே வாழ்வதற்கான சிறந்த வழி. நீங்கள் கேட்டால் போதும், அவர் உங்களுக்கு அறிவுறுத்துவார் மற்றும் அவருடைய வார்த்தையின் மூலம் உங்களை வழிநடத்துவார்.
செய்தி (8 & கீழே):
ஒவ்வொரு நாளும் இயேசுவிடம், “என்ன செய்ய வேண்டும் என்பதைக் காட்டுங்கள், நான் கீழ்ப்படிவேன்” என்று சொல்லுங்கள்.
மனப்பாட வசனம்:
கர்த்தர், “நீ வாழவேண்டிய வழியை உனக்கு போதித்து வழிநடத்துவேன். உன்னைக் காத்து உனக்கு வழிகாட்டியாயிருப்பேன் என்று கூறுகிறார். [சங்கீதம் 32:8]

Leave a comment