
புத்திசாலியான காகம், முயலும் ஆமையும், சிங்கமும் எலியும் என்ற பல நீதிக் கதைகளைச் சிறுவர்கள் கேட்டிருப்பார்கள். வேதத்திலும் வெற்றியுள்ள வாழ்க்கைக்குத் தேவையான அநேக நீதி போதனைகள் உள்ளன என்று எடுத்துக் காட்டும் பாடத் திட்டம் தான் – வெற்றிக்கான வழி – நீதிக் கதைகள் (பாகம் 1). தேவனை அறியாத ஒரு சாதாரண மனிதன் கூட இப்போதனைகளை கடைப்பிடித்தால் வாழ்வில் வெற்றி பெறுவார்கள் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை.
இப்பாடத் திட்டம் தேவனையும் தேவனோடு உள்ள உறவையும் மையப் படுத்தாமல் சக மனிதர்களோடு உள்ள உறவைப் பற்றி அதிகம் விளக்குகிறது. எனவே இதை ஒரு பொது ஸ்தலத்தில் சிறுவர் பள்ளியைத் துவங்கச் சிறந்த துவக்கியாகப் பயன்படுத்தலாம். முதிர்ந்த சிறுவர் பள்ளியில் உள்ள சிறுவர்களுக்கும் இந்த பாடங்கள் பிரயோஜனமாய் இருக்கும்.
“வெற்றிக்கான வழி – வேதாகம நீதிக் கதைகள் 1” என்ற 4 பகுதி கொண்ட பாடத் திட்டத்தை உங்களுக்கு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தச் செய்தியை சிறுவர்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் அவர்களுக்கு எடுத்துச் செல்ல இந்த பாடத் திட்டம் உதவும் என்று நம்புகிறோம்.
குறிப்பு: செய்தியின் ஆழத்தை உங்கள் பார்வையாளர்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்க உங்கள் அனுபவத்தைப் பயன்படுத்தவும்.
இந்தப் பாடத் திட்டமானது (கட்டாயமற்ற) பணித்தாள்களுடன் வருகிறது. நீங்கள் அதை எங்கள் ஆன்லைன் ஸ்டோரில் வாங்கலாம்.

Quick Links
J4K Lesson Plan > Outline
விரிவான பாடங்களுக்கு பட்டன்களை கிளிக் செய்யவும்.
01
நன்றி சொல்
வேத பகுதி: லூக்கா 17:11-19
வேதாகம நிகழ்வு: பத்து குஷ்டரோகிகளில் நன்றி சொன்ன ஒரு குஷ்டரோகி
செய்தி :
வாழ்க்கையில் உன்னிடம்
உள்ள அனைத்தும்
ஒரு பரிசு. உன்னிடம் இருப்பது பலரிடம் இல்லை.
நன்றியுடன் வாழு!
மனப்பாட வசனம்:
எல்லாவற்றிலேயும் நன்றி சொல்லுங்கள். [1 தெசலோனிக்கேயர் 5:18]
02
பகிர்ந்து கொடு
வேத பகுதி: யோவான் 6:1-14
வேதாகம நிகழ்வு: தன்னிடம் இருந்ததை பகிர்ந்து கொடுத்த சிறுவன்
செய்தி :
உன்னிடம் இருப்பதை பகிர்ந்து
கொடு! நீ எவ்வளவு
அதிகமாகப் பகிர்கிறாயோ, அவ்வளவு
அதிகமாக நீ திரும்பப் பெறுவாய்.
மனப்பாட வசனம்:
கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்
[லூக்கா 6:38]
03
ஒப்பிடாதே
வேத பகுதி: தானியேல் 6
வேதாகம நிகழ்வு: பொறாமை கொண்ட பிரதானிகளும் தேசாதிபதிகளும்
செய்தி:
உன்னை மற்றவர்களுடன் ஒப்பிடாதே. உன்னை
உன்னுடன் மட்டுமே ஒப்பிடு.
அப்படி வாழ்ந்தால் நீ எப்போதும்
வெற்றியை நோக்கி
ஓடுவாய்
மனப்பாட வசனம்:
ஒருவன் தன்னை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. அவனவன் தனது செயல்களைச் சீர்தூக்கிப் பார்ப்பானாக. பிறகு அவன் தன்னால் செய்ய முடிந்த காரியங்களைப் பற்றிப் பெருமைப்பட்டுக்கொள்ள இடமிருக்கும். [கலாத்தியர் 6:4]
04
கடினமாக
உழை
வேத பகுதி: 1 இராஜாக்கள் 19 : 19
வேதாகம நிகழ்வு: கடின உழைப்பாளியான எலிசா
செய்தி:
சோம்பேறிகள் வெற்றி பெற மாட்டார்கள். கடின உழைப்பாளிகளே இறுதியில் வெற்றி பெறுவார்கள். நீ கடினமாய் உழைப்பவரா?
மனப்பாட வசனம்:
சோம்பேறி பலவற்றை விரும்புவான், ஆனால் அவனால் அவற்றை அடைய முடிவதில்லை.ஆனால் கடினமாக உழைக்கிறவர்கள் தாம் விரும்புவதைப் பெற்றுக்கொள்வார்கள். [நீதிமொழிகள் 13:4]

Leave a comment