Unit 1 – வேதாகம அறிமுகம்
வாசிக்க தேவைப்படும் நேரம்:
சிறுவர்கள் என்ன கற்றுக்கொள்வார்கள்:
✅ தேவன் படைப்பாளர்; படைப்பைப் பற்றிய சத்தியத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
✅ தேவன் ஏற்கனவே உருவாக்கியவற்றையே அறிவியல் ஆராய்கிறது; அது நம்மை படைப்பாளரான தேவனிடம் வழிநடத்துகிறது.
✅ பெரிய படம் (Big Picture): இப்போது அனைத்தையும் நாம் காணவில்லை; ஆனால் ஒருநாள் தேவனோடு எல்லாம் தெளிவாகும்.
வணக்கம்! 👋
சிறுவர்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் அவர்களுக்கு இயேசுவை அறிமுகப்படுத்தும் J4K-52 பணியில் நீங்கள் இணைந்ததற்கு மிக்க நன்றி.
இந்தப் பாடம் Unit 1 (NEW Account) இன் Chapter 1, Flame Kids 🔥 (8 வயது மற்றும் அதற்கு மேல்) க்காக தயாரிக்கப்பட்டது.
முழுமையான பாடத் திட்டத்தைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
வாங்க, ஆரம்பிக்கலாம்! 🚀
ஆசிரியர் குறிப்பு அட்டை (Teacher Cue Card)
பாடத்தின் அமைப்பு, செயல்பாடுகள் மற்றும் முக்கிய செய்திகளை ஆசிரியர்கள் விரைவாகப் பார்க்க உதவும் சுருக்கமான வழிகாட்டி இது.

பாடத்தின் அமைப்பு
- 3 பகுதிகள்: Build Time → Bible Time → Bye Time
- Build Time: Spark மற்றும் Flame சிறுவர்கள் 2 தனித்தனி குழுக்களாக பிரிக்கப்படுவர்
- Bible Time: சிறுவர்கள் தங்களது வகுப்புகளாகப் பிரிக்கப்படுவர்
- Bye Time: சிறுவர்கள் தங்களது சொந்த வகுப்புகளிலேயே இருப்பர்
1. BUILD TIME – புதிர் செயல்பாடு [🔥🔥]
- சிறுவர்களை குழுக்களாகப் பிரிக்கவும்
- ஒவ்வொரு குழுவிற்கும் குறிப்பு படமில்லாமல் ஒரு புதிர் கொடுக்கவும்
- புதிர் முடிந்த பிறகு, அசல் படத்தை காட்டவும்
நோக்கம்:
- குறைந்த தகவல்களுடன் படைப்பை நாம் எவ்வாறு புரிந்து கொள்கிறோம் என்பதை விளக்குகிறது
- வேதாகமத்தில் தேவன் சொன்ன படைப்புக் குறிப்பிலிருந்து சிறுவர்கள் கற்றுக்கொள்ள தயாராகிறது
2. BIBLE TIME – கண்டுபிடிப்பு [🔥]
- கேள்விகளையும் வேதாகம குறிப்புகளையும் பகிரவும்
- சிறுவர்கள் வேதாகமத்தை வாசித்து, பதில்களை தாங்களே கண்டுபிடிக்கச் செய்யவும்
- ஆசிரியர் சிறிய முடிவுக் குறிப்புகளுடன் நிறைவு செய்யலாம்
முக்கிய கேள்விகள்:
- எல்லாம் எவ்வாறு தொடங்கியது? (ஆதியாகமம் 1:1)
- தொடக்கம் எப்படிப்பட்டதாக இருந்தது? (ஆதியாகமம் 1:1–2)
- டைனோசார்கள் இருந்தனவா? (யோபு 40:15–45; யோபு 41; சங்கீதம் 104:26)
- லூசிபர் படைக்கப்பட்டவரா? அவருக்கு என்ன நடந்தது? (எசாயா 14:12; எசேக்கியேல் 28:13)
விருப்பம் (பெரிய சிறுவர்களுக்காக):
- வேதாகமத்தில் அறிவியல் சூத்திரங்கள் (formulas) ஏன் இல்லை?
- தேவனை யார் படைத்தார்?
3. BYE TIME – வீட்டுப் பணிகள் [🔥]
- அடுத்த அமர்வு: தேவன் உலகத்தை எப்படி படைத்தார்
- வீட்டுப் பணி: வேதாகமம் / கூகுள் / AI / உங்கள் ஆசிரியரைப் பயன்படுத்தி ஆராய்ச்சி செய்யவும்
கேள்வி: சூரியன் இல்லாவிட்டால் பூமிக்கு என்ன நடக்கும்?
விரிவான குறிப்பு
ஒவ்வொரு அமர்வு பகுதியின் விவரங்களைப் பார்க்க கீழ்க்காணும் இணைப்புகளைப் பயன்படுத்தவும்.
நேரம்: 20 நிமிடங்கள் [🔥🔥]

செயற்பாடு:
சிறுவர்களை சிறிய குழுக்களாகப் பிரிக்கவும். ஒவ்வொரு குழுவிற்கும் குறிப்பு படம் இல்லாமல் ஒரு புதிரை வழங்குங்கள். அவர்கள் தாங்களே அதை அமைக்க அனுமதிக்கவும். முடிவில், அசல் படத்தை காட்டி, அவர்களது அமைப்பு அதற்கு எவ்வளவு நெருக்கமாக இருந்தது என்பதைப் பற்றி பேசுங்கள்.
பேச வேண்டிய கருத்து (Talk Point):
உங்களிடம் சில துண்டுகள் இருந்தன; ஆனால் முழுப் படம் இல்லை. இருந்தவற்றைக் கொண்டு அர்த்தம் காண முயன்றீர்கள். இன்று, படைப்பின் துண்டுகளை ஒன்றுசேர்க்கப் போகிறோம் — தொடக்கத்திலிருந்தே அங்கே இருந்தவராகிய தேவன் நமக்குக் கொடுத்த துண்டுகளை. அதே சமயம், அறிவியல் எதைச் சொல்கிறது என்பதையும் அதுடன் ஒப்பிடப் போகிறோம்.
அறிவியல் என்பது, தேவன் ஏற்கனவே செய்ததைப் பற்றிய புதிரை ஒன்றுசேர்க்கும் செயலே. ஆகவே, அறிவியலை நாம் மேலும் ஆழமாகப் படிக்கும் போது, இந்த உலகத்தை வடிவமைத்த படைப்பாளியான தேவனை நோக்கி அது மேலும் நம்மை சுட்டிக்காட்டுகிறது.
இன்னும் நாம் முழுப் படத்தையும் காணவில்லை; ஆனால் இயற்கையில் புதிதாக ஒன்றைக் கண்டுபிடிக்கும்போது போதெல்லாம், தேவன் ஏற்கனவே வெளிப்படுத்திய உண்மைக்கு நாமும் மேலும் அருகே நகர்கிறோம்.
நேரம்: 35 நிமிடங்கள் [🔥]
ஒவ்வொரு கேள்வியையும் அதற்கான வேதாகம மேற்கோளுடன் பகிர்ந்து தொடங்குங்கள். சிறுவர்கள் தாங்களே வாசித்து, விவாதித்து, பதில்களை கண்டுபிடிக்க நேரம் ஒதுக்குங்கள். அவர்கள் கண்டுபிடித்தவற்றை பகிர்ந்த பிறகு, ஒவ்வொரு கேள்விக்கும் ஆசிரியர் சுருக்கமான குறிப்புகளுடன் முடிக்கலாம் — தேவன் படைப்பாளி என்பதும், படைப்பில் உள்ள ஒழுங்கும் நோக்கமும், வாழ்க்கையின் பெரிய கேள்விகளுக்கு வேதாகமம் எவ்வாறு பதில் அளிக்கிறது என்பதையும் அவர்கள் கண்டறிய உதவுங்கள்.
அமர்வை முடிக்கும்போது, ஆர்வத்தை உறுதி செய்யவும், விசுவாசத்தை ஊக்கப்படுத்தவும், இப்போது எல்லாவற்றையும் நாம் அறியவில்லை என்றாலும், தேவனை நம்புவதற்கு அவர் போதுமான அளவு வெளிப்படுத்தியுள்ளார் என்பதை சிறுவர்களுக்கு நினைவூட்டவும்.
Q1: எல்லாம் எவ்வாறு தொடங்கியது?
பிரபஞ்சம் தானாகவே உருவானதா, அல்லது தேவன் அதை திட்டமிட்டு படைத்தாரா?
குறிப்பு: ஆதியாகமம் 1:1, எபேசியர் 1:4
ஆசிரியர் குறிப்புகள்:
பூமி எவ்வாறு தொடங்கியது என்பதைக் குறித்து மதச்சார்பற்ற விஞ்ஞானிகள் பல கருத்துகளை முன்வைத்துள்ளனர். சிலர் பிக் பேங் (Big Bang) பற்றிப் பேசுகிறார்கள்; மற்றவர்கள் பரிணாம வளர்ச்சியே எல்லாவற்றையும் விளக்குகிறது என்றும், மனிதர்கள் குரங்குகளிலிருந்து வந்தவர்கள் என்றும் கூறுகிறார்கள். ஆனால் மதச்சார்பற்ற விஞ்ஞானிகளும் ஒரே ஒரு விஷயத்தில் ஒப்புக்கொள்கிறார்கள்—இதுவரை உள்ள எந்த விஞ்ஞான ஆதாரமும் ஆதியாகமம் 1-ல் கூறப்பட்ட படைப்புக் குறிப்பை மறுப்பதில்லை.
வேதாகமம் தெளிவாகச் சொல்கிறது: “ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்”.
படைப்பின் ஆதாரமான தேவனே, அது எவ்வாறு தொடங்கியது என்பதை நமக்குத் தெரிவிக்கிறார். படைப்பு சீரற்ற இரசாயன எதிர்வினைகளின் விளைவு அல்ல. தேவன் அனைத்தையும் திட்டமிட்டு, நோக்கத்தோடு படைத்தார். படைப்பைப் பற்றி அவர் கவனமாக சிந்தித்தார்—அதில் நீங்களும் அடங்குகிறீர்கள். உலகத்தோற்றத்துக்கு முன்னே தேவன் நம்மைத் தெரிந்துகொண்டார் என்று வேதாகமம் நமக்குச் சொல்லுகிறது.
Q2: ஆரம்பம் எப்படியிருந்தது?
பூமி இருட்டாக இருந்ததா அல்லது பிரகாசமாக இருந்ததா? அமைதியாக இருந்ததா அல்லது சத்தமாக இருந்ததா? அது காலியாக இருந்ததா அல்லது நிரம்பியிருந்ததா?
குறிப்பு: ஆதியாகமம் 1:1, 2
ஆசிரியர் குறிப்புகள்:
ஆரம்பம் அழகாக இல்லை என்று வேதாகமம் நமக்குச் சொல்கிறது. பூமி வடிவமற்றதாகவும், காலியாகவும், தண்ணீரால் மூடப்பட்டதாகவும் இருந்தது. வெளிச்சம் எதுவும் இல்லை—இருள் மட்டுமே இருந்தது. சில வேதாகம அறிஞர்கள், முதலில் ஒரு அழகான உலகம் இருந்ததாகவும், சாத்தான் தேவனுக்கு விரோதமாக கிளர்ச்சி செய்தபோது அது அழிந்துவிட்டதாகவும், பின்னர் அவன் பூமிக்கு தள்ளப்பட்டதாகவும் நம்புகிறார்கள். இந்தக் கருத்து Gap Theory (இடைவேளை கோட்பாடு) என அழைக்கப்படுகிறது; ஏனெனில் ஆதியாகமம் 1:1 மற்றும் 1:2 இடையே ஒரு இடைவெளி இருந்ததாக அவர்கள் கூறுகிறார்கள். மற்ற அறிஞர்கள் இதை ஏற்கவில்லை; அது உண்மையாக இருந்தால், தேவன் இவ்வளவு முக்கியமான தகவலை வேதாகமத்தில் விட்டுவிட மாட்டார் என்று அவர்கள் நம்புகிறார்கள். இந்தக் கருத்து பொதுவாக Young Earth Theory (இளம் பூமி கோட்பாடு) என அழைக்கப்படுகிறது.
எந்தக் கருத்து சரியானதாக இருந்தாலும், ஒன்று மட்டும் தெளிவாக உள்ளது: இன்று நாம் காணும் பூமி ஆரம்பத்தில் அழகாக இல்லை. அது காலியாகவும், பாழடைந்ததாகவும் இருந்தது. ஆனால் தேவன் அதை இன்று நாம் வாழும் அழகான உலகமாக மாற்றினார்.
Q3: டைனோசர்கள் உண்மையில் இருந்தனவா? வேதாகமம் அவற்றைப் பற்றிப் பேசுகிறதா?
குறிப்பு: யோபு 40:15–45; யோபு 41; சங்கீதம் 104:26
ஆசிரியர் குறிப்புகள்:
முதல் டைனோசர் உயிர்ச்சிதைவு (fossil) 1677ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ராபர்ட் ப்ளாட் (Robert Plot) என்பவரால் அடையாளம் காணப்பட்டது. அதற்கு பல ஆண்டுகள் பின்னர், “டைனோசர்” (Dinosaur) என்ற சொல் விஞ்ஞானி ரிச்சர்ட் ஓவென் (Richard Owen) அவர்களால் உருவாக்கப்பட்டது. இந்தச் சொல் கிரேக்க மொழியில் “பயமூட்டும் மிகப் பெரிய பல்லி” என்ற அர்த்தம் கொண்ட வார்த்தைகளில் இருந்து வந்தது. மனிதர்கள் டைனோசர்களை சமீப காலத்தில்தான் கண்டறிந்தனர் என்பதைக் காட்டுகிறது.
வேதாகமம் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது—“டைனோசர்” என்ற சொல் பயன்படுத்தப்படும் காலத்திற்கு மிகவும் முன்பே எழுதப்பட்டது. ஆகையால் வேதாகமத்தில் அந்தச் சொல் பயன்படுத்தப்படவில்லை என்பது ஆச்சரியமானது அல்ல. இருப்பினும், வேதாகமம் வலிமையானதும் பயமூட்டுவதுமான உயிரினங்களை விவரிக்கிறது.
பல வேதாகம அறிஞர்கள், இந்த உயிரினங்கள் டைனோசர்களாக இருக்கலாம் என்று நம்புகிறார்கள்:
பிகெமோத் (யோபு 40:15–45),
லிவியாதான் (யோபு 41; சங்கீதம் 104:26),
வலுசர்ப்பங்கள்/ டிராகன் (சங்கீதம் 74:13).
மீண்டும் ஒருமுறை, வேதாகமம் விஞ்ஞானத்துடன் முரண்படுவதில்லை என்பதை நாம் காண்கிறோம்.
Q4: லூசிஃபர் (சாத்தான்) தேவனால் படைக்கப்பட்டவரா? அவனுக்கு என்ன நடந்தது?
குறிப்பு: எசாயா 14:12; எசேக்கியேல் 28:13
ஆசிரியர் குறிப்புகள்:
ஆம், சாத்தானும் தேவனால் படைக்கப்பட்டவனே—நம்மைப் போலவே. ஆரம்பத்தில் அவன் தீயவனாக இல்லை. வேதாகமம் அவன் அழகானவனாக, ஒரு சிறப்பு நிலையைக் கொண்டவனாகவும் இருந்தான் என்று கூறுகிறது. ஆனால் ஒரு நாள், அகந்தை அவனது இருதயத்தை நிரப்பியது. அவன் தேவனைவிட உயர்ந்தவனாக ஆக விரும்பினான்.
உங்கள் பிரியாணி உங்களிடம், “இனிமேல் நான் உன்னை ஆளுவேன். நான் சொல்வதையெல்லாம் நீ கேட்க வேண்டும்” என்று சொன்னால் எப்படி இருக்கும்? அது ஒருபோதும் நடக்காது அல்லவா! இப்படி, தனது அகந்தையும் கலகமும் காரணமாக சாத்தான் கீழே வீழ்த்தப்பட்டான்.
சில வேதாகம அறிஞர்கள், இது டைனோசர்களின் அழிவுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள். ஆனால் வேதாகமம் இதைப் பற்றி தெளிவாகக் கூறவில்லை.
கூடுதல் கேள்விகள் (Optional – பெரிய சிறுவர்களுக்காக)
Q6: தேவன் ஏன் படைப்பின் அறிவியலை வேதாகமத்தில் விளக்கவில்லை? ஏன் சமன்பாடுகளோ(equations) அல்லது சூத்திரங்களோ (formulas) இல்லை?
வேதாகமம் ஒரு அறிவியல் பாடநூல் அல்ல. அது தேவனின் அன்புக் கடிதமும், சிறந்த வாழ்க்கையை வாழ வழிகாட்டும் கையேடும் ஆகும். தேவன் இதை விஞ்ஞானிகளுக்காக மட்டுமே எழுதவில்லை.
வேதாகமம் சிக்கலான கணித சமன்பாடுகளும் இரசாயன சூத்திரங்களும் நிறைந்ததாக இருந்திருந்தால், நம்மில் பலருக்கு அதை புரிந்துகொள்ள முடியாது.
அதனால், அனைவரும் புரிந்துகொள்ளக்கூடிய எளிய முறையில் படைப்பை தேவன் விளக்கியுள்ளார்.
வேதாகமம் ஒவ்வொரு விபரத்தையும் சொல்லவில்லை என்றாலும், எந்த அறிவியல் கருத்துகள் சத்தியத்துடன் ஒத்துப்போகின்றன, எவை ஒத்துப்போகாது என்பதை அறியத் தேவையான குறிப்புகளை அது நமக்கு அளிக்கிறது.
Q7: தேவன் எங்கிருந்து வந்தார்? தேவனை யார் படைத்தார்?
டாக்டர் கெண்ட் ஹோவிந்த் (Dr. Kent Hovind) இதை அழகாக விளக்குகிறார்:
“வேதாகமத்தில் சொல்லப்படும் தேவன் காலம் (Time), இடம் (Space), பொருள் (Matter) ஆகியவற்றால் பாதிக்கப்படுபவர் அல்ல. அவர் இவற்றால் பாதிக்கப்படுபவராக இருந்தால், அவர் தேவன் அல்ல.
காலம், இடம், பொருள் — இம்மூன்றையும் நாம் ஒரு தொடர்ச்சி (continuum) என்று அழைக்கிறோம்; அவை அனைத்தும் ஒரே நேரத்தில் தோன்றியிருக்க வேண்டும்.
இடமில்லாமல் பொருள் இருந்தால், அதை எங்கு வைப்பீர்கள்?
இடமும் பொருளும் இருந்தும் காலம் இல்லையென்றால், அதை எப்போது வைப்பீர்கள்?
காலம், இடம், பொருள் — இவை தனித்தனியாக இருக்க முடியாது; அவை ஒரே நேரத்தில் தோன்ற வேண்டும்.
வேதாகமம் இதற்குப் பதிலை 10 வார்த்தைகளில் கூறுகிறது:
“ஆதியிலே (காலம்), தேவன் வானத்தையும் (இடம்) பூமியையும் (பொருள்) சிருஷ்டித்தார்.”
காலத்திற்கு கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் உள்ளது.
இடத்திற்கு நீளம், அகலம், உயரம் உள்ளது.
பொருளுக்கு திடம், திரவம், வாயு உள்ளது.
இவற்றையெல்லாம் படைத்த தேவன், இவைகளுக்குப் புறம்பாக இருக்க வேண்டும்.
அவர் காலத்தால் கட்டுப்படுத்தப்பட்டவராக இருந்தால், அவர் தேவன் அல்ல.
உதாரணமாக, ஒரு மொபைல் போனை உருவாக்கியவர், அந்த மொபைல் போனுக்குள் இருந்து திரையில் எண்களை மாற்றிக்கொண்டிருப்பதில்லை.
அதேபோல், பிரபஞ்சத்தை படைத்த தேவன், பிரபஞ்சத்திற்குள் இல்லை;
அவர் அதற்கு மேலானவர், அதற்குப் புறம்பானவர், அதனால் பாதிக்கப்படாதவர்.
“தேவன் எங்கிருந்து வந்தார்?” என்ற கேள்வி, தேவன் ஒரு வரையறுக்கப்பட்டவர் என்ற தவறான கருத்துகள் இருந்து வருகிறது.
நாம் தேவனை முழுமையாக புரிந்து கொள்ள முடிந்திருந்தால், அவர் ஆராதிக்கத் தகுதியானவராக இருக்க மாட்டார்.”
இறுதி முடிவு
இன்றைய அனைத்து விவாதங்களும் ஒரு பெரிய கேள்விக்கே நம்மை அழைத்து செல்கின்றன: தேவன் ஏன் இந்த உலகத்தை படைத்தார்? இதை வரும் அமர்வுகளில் தொடர்ந்து நாம் ஆராய்வோம்.
இப்போதைக்கு நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கியமான கருத்து இதுதான்: படைப்பின் ஒவ்வொரு செயல்முறையையும் வேதாகமம் விரிவாக விளக்காவிட்டாலும், தேவனை நம்புவதற்கு போதுமானதை அவர் நமக்குத் வெளிப்படுத்தியுள்ளார். தேவன் இல்லை என்பதை அறிவியல் நிரூபிக்க முடியவில்லை. உண்மையில், பல கிறிஸ்தவ அறிவியலாளர்கள், தேவன் செய்தவற்றை அறிவியலின் மூலம் மேலும் மேலும் கண்டுபிடித்து வருகின்றனர்.
இந்த அமர்வு, உங்கள் விசுவாசத்திலும், தேவனை பற்றிய ஆர்வத்திலும் வளர உங்களை ஊக்குவித்திருக்க வேண்டும் என்பதே எங்களின் நம்பிக்கை.
5 நிமிடங்கள்: [🔥]
அடுத்த அமர்வில் தேவன் உலகத்தை எவ்வாறு படைத்தார் என்பதை அவர்கள் கற்றுக்கொள்ளப் போவதாக சிறுவர்களுக்கு தெரிவிக்கவும். அதற்கு முன், வேதாகமம் / கூகிள்/ செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தியோ அல்லது அவர்கள் ஆசிரியரிடம் கேட்டுவோ பின்வரும் கேள்வியை ஆராயச் சொல்லுங்கள்.
👉 சூரியன் இல்லையெனில் பூமிக்கு என்ன நடக்கும்?
விரைவு இணைப்புகள்
பாடத்திற்கு தேவையான வடிவங்களை (Templates) இங்கே பதிவிறக்கம் செய்யலாம் (உள்ளிருந்தால்).
சுட்டி இணைப்புகள்
பாடத்தை மேலும் ஆய்வு/ஆராய்ச்சி செய்ய விரும்பினால் கீழ்க்காணும் இணைப்புகளைப் பயன்படுத்தவும் (உள்ளிருந்தால்).
Bill Nye Debates Ken Ham – HD (Official)
https://www.youtube.com/live/z6kgvhG3AkI?si=yCY7pJtYCkgiZxHU
அறிவிப்பு பலகை:

ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்துவமான மனப்பாட வசனம் இல்லை. பதிலாக, சிறுவர்கள் முழு அதிகாரங்கள் அல்லது வேதாகமப் பகுதிகளை மனப்பாடம் செய்ய ஊக்கப்படுத்துங்கள்.
Unit 1 (NEW Account) நினைவுப் பகுதி:
சங்கீதம் 33
உங்களுக்கும் உங்கள் சிறுவர்களுக்கும் இந்தப் பதிவு பயனுள்ளதாக இருந்ததா? அப்படியானால், கமெண்ட் பாக்ஸில் உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?
தன்றி! 💖

Leave a comment